For Thala Thalapathy Fans



Sunday, November 27, 2011

MANIRATHNAM AND TWO SUPERSTARS JOINTS TOGETHER SOON:::::

This is interesting.The Best director of Tamil cinema and two biggest and Loved actors are joining together.Yah,We heard is true.Maniratnam have a best and different script made for friendship.This is officially made for Ajith and Vijay.They two have accepted to do the film.The movie budget is said to be 75 + crores.The producer speak is going on.Two actors are said to be busy now with their current projects(Ajith with Billa-II and Vijay has a combo both with A.R.Murugadoss movie and Yohan adyayam ondru which is directed by Gautam Vasudev Menon.All kollywood lovers are waiting for a VIJAY-AJITH combo for a long time.And now,Maniratnam has made it to 70% conform news.If this happens,THALA-THALAPATHY fans will be United and no fight will be arose between them after this movie.

நண்பன் பட TRAILER பார்க்க ...///

தளபதி ரசிகர்களுக்காக .............

அஜித்தின் “மங்காத்தா” படம்: 100-வது நாள் விழா...????


அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் நடித்து வெளியாகிய படம் “மங்காத்தா”. அஜித்தின் 50-வது படமான இப்படத்தை இயக்கியவர் வெங்கட் பிரபு. அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். இவர்களுடன் அர்ஜுன், ஆண்ட்ரியா, உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படம் 31 ஆகஸ்ட் 2011 அன்று வெளியானது.
வெற்றி படமாக ஓடிகொண்டிருக்கும் “மங்காத்தா” படத்தின் 100-வது நாள் விழா கொண்டாடும் தருணம் நெருங்கி கொண்டிருக்கிறது.
இதை பற்றி இந்த படத்தின் தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி-யிடம் கேட்டதற்கு, அவர் கூறியதாவது:
‘மங்காத்தா’ படத்தின் வெற்றி, எங்களை மிக்க மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இப்படத்தை வெற்றி படமாக்கிய ரசிகர்களுக்கு எங்களது நன்றியை தெரிவித்துகொள்கிறேன். அஜித் பொது விழாக்களில் கலந்து கொள்வதை தவிர்த்து வருவது அனைவரும் தெரிந்த ஒன்று. இதனால் “மங்காத்தா” படத்தின் 100-வது நாள் விழாவில் கலந்து கொள்வாரா? என்பது சந்தேகமே. படத்தின் கதாநாயகன் கலந்துக் கொள்ளாமல், இப்படியொரு விழா நடத்தினாலும் நன்றாக இருக்காது. மேலும்,தற்போது மங்காத்தா வெற்றிக்கு பிறகு அஜித் “பில்லா 2″ படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார். “மங்காத்தா” படத்தின் 100-வது நாள் வெற்றி விழா கொண்டாடும் எண்ணம் இல்லை.

பாஞ்சா படத்தின் தமிழ் ரீமேக்கில் அஜீத் நடிக்கவில்லை.....


மங்காத்தா வெற்றிக்குப்பின்பு அஜீத் குமார் பில்லா-2 ல் நடித்துக் கொண்டிருக்கிறார்.
பவன் கல்யான் நடிப்பில் தெலுங்கில் வெளிவர இருக்கும் படம் பாஞ்சா. இப்படத்தை விஷ்ணுவர்தன் இயக்கியுள்ளார்.
இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார். இப்படத்தின் பாடல்களுக்கு தெலுங்கில் வரவேற்பு கிடைத்திருக்கிறது.


அஜீத் நடிக்கும் அடுத்த படத்தினை இயக்க இருக்கிறார் விஷ்ணுவர்தன். ஏ.எம்.ரத்னம் தயாரிக்க இருக்கிறார். இந்த நிலையில் பாஞ்சா படத்தின் தமிழ் ரீமேக்கை தான் அஜீத்தை வைத்து விஷ்ணுவர்த்தன் இயக்க இருக்கிறார் என்று செய்திகள் வலம் வந்தன.


இந்நிலையில் பாஞ்சா படத்தின் தயாரிப்பாளர்கள் அப்படத்தினை தமிழில் டப்பிங் செய்து வெளியிட இருக்கிறார்கள். தமிழ் டப்பிங் படத்திற்கு குறி என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள்.
வருகிற டிசம்பர் 9 ஆம் திகதி பாஞ்சா வெளியாக இருக்கிறது. தற்போது தான் தமிழ் டப்பிங் பணிகள் தொடங்கி இருக்கிறது. சனவரியில் தமிழ் டப்பிங்கான குறியை படக்குழு வெளியிட இருக்கிறார்கள்.
இந்த செய்தியின் மூலம் பாஞ்சா படத்தின் தமிழ் ரீமேக்கில் அஜீத் நடிக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

விஜய் நடிக்கும் ஏ.ஆர்.முருகதாஸின் துப்பாக்கி::::


ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் படத்திற்கு "துப்பாக்கி" என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வேலாயுதம், நண்பன் படங்களைத் தொடர்ந்து விஜய், அடுத்து டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்த செய்தி தான்.


படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். ஆரம்பத்தில் ஜெமினி பிலிம்ஸ் தயாரிப்பதாக இருந்த இப்படத்தை, இப்போது கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க இருக்கிறார்.


இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் துவங்க இருக்கிறது. இந்நிலையில் படத்திற்கு துப்பாக்கி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


கமல் நடிப்பில் வெளிவந்த நாயகன் பட பாணியில், இந்தபடம் உருவாக இருப்பதாகவும், படத்திற்கு பட்ஜெட் ரூ.65 கோடி என்றும் கூறப்படுகிறது. விஜய் படத்துக்கு இவ்வளவு பெரிய பட்ஜெட் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Friday, November 25, 2011

சகபயணிகளின் பாராட்டை பெற்றார் தல !!!!!


அஜீத் நடித்து வரும் “பில்லா- 2”  படத்தை சக்ரி டோலட்டி இயக்குகிறார்.
இதன் முதல் கட்ட படப்பிடிப்பு கோவாவில் நடக்கின்றது. அடுத்த கட்டமாக ஐரோப்பிய நாடுகளில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர்.



அங்கு புறப்பட்டு செல்வதற்காக அஜீத் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு வந்தார். பாதுகாப்பு சோதனைக்காக நிறைய பயணிகள் அங்கு காத்து நின்றனர்.


அவர்களுடன் அஜீத்தும் நின்று கொண்டிருப்பதை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் அடையாளம் கண்டு அவரை அணுகினர். கூட்டத்தினரோடு செல்லாமல் சிறப்பு வழியில் சென்று பாதுகாப்பு சோதனைகளை முடித்து விமானத்துக்குள் செல்ல அனுமதி அளித்தனர்.


ஆனால் அஜீத் இதனை மறுத்து விட்டார். பயணிகளுடன் வரிசையில் 30 நிமிடம் காத்து நின்று உள்ளே சென்ற அஜீத்தின் செயலை சக பயணிகள் பாராட்டினர்.

Tuesday, November 22, 2011

Ajiths Grace In Taking Photossssss


Ajith is holding a parallel shooting on the sets of 'Billa 2'. There's nothing to read between the lines as we are talking about the Thala's love for photography. "During breaks, Ajith takes his camera out and captures all interesting things he comes across," say sources.
"When the shooting of Billa 2 was taking place in Goa recently, Ajith was walking on the sea shore when he spotted a beautiful sand figurine of Lord Shiva, which was yet to get a full shape. It was made by a foreign tourist and the Thala immediately clicked a photo of it," they say.
"The photo was so good and it became one of the favourites of Ajith. He has got a huge collection of photographs at his home and those close to him are urging for a long time to hold a photo exhibition. But the Thala's only answer is a smile to them," the sources further say.
Meanwhile, the cast and crew of 'Billa 2' will soon pack their bags off to some European countries to shoot songs and stunt sequences. Director Chakri Toleti is so particular that stunts and songs should be shot in a rich and glossy manner, it is said.

Vishnuvardhan To Rope With Ajith??????


Vishnuvardhan’s Telugu film Panjaa is ready to rock the theatres soon and expectations are very high on this project as it stars Power Star Pawan Kalyan in the lead role. There is a talk that Panjaa may be dubbed in Tamil but sources say that Vishnuvardhan is toying with the idea of remaking the film in Tamil.
He is trying to rope in Ajith to play the lead role in the remake to make up for the loss of Billa 2 which he was supposed to direct but eventually shifted hands to Chakri Toleti, sources say.

Vijay’s role in AR Murugadoss’s film::::::!!!!!


In the AR Murugadoss film, Vijay is playing a Mumbai dada, reports some sources in Kollywood. Though this fact has not been confirmed either by AR Murugadoss or Vijay, the news has started to make rounds.
The film has not been titled yet and AR Murugadoss is expected to announce the title any time now. However, the speculations on Vijay’s role in this film have started to make rounds. As per some reports in Kollywood, Vijay’s role in the movie will be similar to that of Kamal Haasan’s in Nayagan.
Yet another news that we hear on this project is that the film will begin in Tiruchendur and it will show Vijay’s transition as dada in Mumbai.

Monday, November 21, 2011

விஜய்க்கு ஜோடியாகி அனுஷ்காவுக்கு ஷாக் கொடுத்த காஜல்! !!!!

விஜய்யின் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாகிவிடலாம் என்று எண்ணியிருந்த அனுஷ்காவுக்கு பெரிய ஷாக் கொடுத்திருக்கிறார் நடிகை காஜல் அகர்வால். வேலாயுதம், நண்பன் படத்தை தொடர்ந்து அடுத்து, ஏ,ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிக்கும் படம் மாலை நேர மழைத்துளி. இந்த படத்தில் ஏஞ்சலா ஜான்சன் என்ற மாடல் அழகிதான் நாயகியாக நடிப்பதாக இருந்தது. ஆனால் போட்டோ செஷன் நடத்திய முருகதாஸ், அவர் இந்த கதைக்கு பொருந்த மாட்டார் என்று நீக்கிவிட்டு, வேறு நடிகை தேடி வந்தார். இதையறிந்த அனுஷ்கா ஏற்கனவே தான் விஜய்யுடன் வேட்டைக்காரன் படத்தில் நடித்திருப்பதால் தனக்கு சான் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஒரு அப்ளிகேசன் போட்டு வைத்திருந்தார்.

ஆனால் யாருமே எதிர்பாராதவிதமாக திடுதிப்பென்று காஜல் அகர்வாலை அப்படத்திற்கு கமிட் பண்ணி விட்டனர். இதனால் பலத்த அதிர்ச்சி அடைந்தார் அனுஷ்கா. இந்த செய்தியை உறுதிப்படுத்த அவர் விஜய் வட்டாரத்தை தொடர்பு கொண்டபோது, காஜலுக்கு  அட்வான்சே கைமாறி விட்டது  தெரியவந்திருக்கிறது. இதனால் தெலுங்கில் தனக்கு போட்டி நடிகையாக வந்த காஜல், இப்போது தமிழுக்கும் வந்து விட்டாரே என்ற கொதிப்பில் இருக்கிறார் அனுஷ்கா.

Sunday, November 20, 2011

அஜித்தை ரஜினியாக்கும் ரசிகர்கள்::::::


ரஜினிக்கு செல்வாக்கை பலப்படுத்திய பல படங்களின் தலைப்புகளை கோடம்பாக்கத்தில் நல்ல விலைக்கு விற்று வருகிறார்கள். இந்த வியாபாரம் ஒருபுறம் இருக்க, ரஜினியின் பழைய படங்களை
ரீமேக் செய்வதிலும் ஆர்வம் காட்டுகிறார்கள். இங்கே ரஜினி நடித்த கதாபாத்திரங்களை ரீபிளேஸ் செய்வதற்கு அஜித்தை விட்டால் ஆள் இல்லை என்கிறார்கள்.
ஏற்கனவே ரஜினியின் பில்லா ரீமேக்கில் நடித்த அஜித்துக்கு அந்தப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்! அந்த வெற்றி தந்த உற்சாகத்தில் பில்லா பாகம் இரண்டில் தற்போது நடித்து வருகிறார் அஜீத்.

Saturday, November 19, 2011

நண்பனோடு மோதவருகின்றது வேட்டை !!!!!




ஆர்யா, மாதவன், சமீரா ரெட்டி, அமலாபால் நடித்து வரும் படம் ‘வேட்டை’. லிங்குசாமி இயக்க யுவன்சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.
திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் மூலம் லிங்குசாமியே தயாரிக்க யு.டிவி நிறுவனம் இப்படத்தினை வெளியிட இருக்கிறது. கிறிஸ்துமஸ் தின வெளியீடு என முடிவு செய்யப்பட்டு வேலைகளை துரிதப்படுத்தி வந்தார்கள்.
இன்னும் 2 பாடல்களை படமாக்க வேண்டுமாம். ஒரு பாடலுக்காக வரும் 20ம் தேதி ஆர்யா, அமலாபால் இருவரும் துபாய் செல்ல இருக்கிறார்கள்.
மற்றொரு பாடலுக்காக ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக 60 லட்ச ரூபாய்க்கு செட் அமைத்து இருக்கிறார்கள். இவ்விரண்டு பாடல்கள் படமாக்கப்பட்டதும், அதனையெடுத்து இதர பணிகள் இருப்பதால் படத்தினை 2012 பொங்கல் அன்று வெளியிட தீர்மானித்து இருக்கிறார்கள்.
இப்படத்தின் இசையை டிசம்பர் 2ம் வாரத்தில் வெளியிட இருக்கிறார்கள். பொங்கல் 2012 அன்று விஜய் நடிக்கும் ‘நண்பன்’ படத்தோடு போட்டியிட இருக்கிறது ‘வேட்டை’.

பில்லா 2 வில் குத்தாட்டம் போடத் தயாராகும் கவர்ச்சி நாயகி


அஜீத் நடித்து வரும் பில்லா-2 படத்தில் குத்தாட்டம் போடுகிறார் மீனாட்சி தீக்த். பில்லா -2 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த ஜுலை மாதம் தொடங்கியது.
இப்படத்தை உன்னைப்போல் ஒருவன் படத்தை இயக்கிய சக்ரி டோலட்டி இயக்குகிறார். பார்வதி ஓமனக்குட்டன் நாயகியாக நடிக்கிறார்.
இப்படத்தில் தெலுங்கு திரைப்பட உலகில் ‘தூக்குடு’ படத்தின் மூலம் பிரபலமான மீனாக்சி தீக்சித் அஜித்துடன் சேர்ந்து ஒரு குத்தாட்டம் ஆடியுள்ளார். பில்லா படத்தில் யுவன் சங்கர் இசையில் நமீதா ஆடிய ‘ஏதாவது செய்’ என்ற குத்துப்பாடல் மெகா ஹிட்டானது.
அதேபோல் பில்லா 2 விலும் மீனாக்சி தீட்சித் ஆடிய குத்தாட்டம் மிகப்பெரிய அளவில் ஹிட்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் படத்தை பிர்லா குழுமத்தின் இன் எண்டர்டெயின்மெயின்டும், சுரேஷ் பாலாஜியும் இணைந்து தயாரிக்கின்றனர்.

Friday, November 18, 2011

தல தளபதி யின் ஸ்பெஷல் வீடியோ .....

FOR THALA THALAPATHY VIEWERS...HWS IT

வைரமுத்து மீது வாள் வீசிய விஜய்

பிரபல மலையாள இயக்குநர் சந்தோஷ் சிவன் இயக்கத்தில், ப்ருத்விராஜ், பிரபுதேவா, ஆர்யா, ஜெனிலியா, வித்யாபாலன், தபு, நித்யா மேனன் என்று ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து சிலமாதங்களுக்கு முன்னர் மலையாளத்தில் வெளிவந்த படம் உருமி. 15ம் நூற்றாண்டை மையப்படுத்தி, சரித்திர படமாக இப்படத்தை உருவாக்கி இருக்கிறார் டைரக்டர் சந்தோஷ் சிவன். மலையாளத்தில் சூப்பர் ஹிட்டாகியுள்ள இப்படம் தமிழிழும் அதே பெயரில் உருவாகியுள்ளது. இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் சென்னையில் நடந்தது. 

இந்தவிழாவில் நடிகர் விஜய், டைரக்டர்கள் மணிரத்னம், எஸ்.ஜே.சூர்யா, ஏ.ஆர்.முருகதாஸ், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர். படத்தின் ஆடியோ சி.டி.யை நடிகர் ‌விஜய் வெளியிட அதை வைரமுத்து பெற்றுக்கொண்டார். விழாவில் நடிகர் விஜய்க்கு அன்பளிப்பாக, சுருள் வாளை டைரக்டர் சந்தோஷ் சிவன் பரிசளித்தார். வாளை கையில் எடுத்த அடுத்த நிமிடமே எம்.ஜி.ஆர்., ஸ்டைலில் ஒரு சுழற்று சுழற்றினார் விஜய். அது எதிர்பாரா விதமாக அருகில் நின்றிருந்த வைரமுத்து மீது பட சற்றென்று பயந்து விலகினார். 

Ajith’s villain for Vijay?


The buzz in Kollywood is that Ajith’s villain in Billa 2 has been signed up by AR Murugadoss for the Vijay starrer that he is to begin directing from next month onwards. Vidyut hogged the limelight with the Bollywood flick Force and this bagged him the baddie role in Billa 2.
And now AR Murugadoss is said to have set his eyes on Vidyut to play the bad guy in Vijay’s film.
The project will start rolling from December onwards and a formal announcement regarding the leading lady and villain is expected from AR Murugadoss soon.

Vijay fans celebrate 52 in a Different way...


Vijay fans celebrated Velayutham’s success recently and since it is his 52nd film, about 52 college students pledged to donate their organs. The star was present at this function that took place recently.
Vijay has always been supportive of such causes and has encouraged his fans to donate organs, blood etc. The actor said that he is impressed by the students coming forward to donate their organs and thanked them for it.

தல-தளபதி மீண்டும் இணைவார்களா?????


இந்தியில் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காமல் ரசிக்க வைக்கும் படம் ‘சோலே’. 1975ஆம் ஆண்டு வெளி வந்த இந்த படத்தில், இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பும், தர்மேந்திராவும் நடித்திருந்தனர். தற்போது அந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுவும், இளைய தளபதி விஜய்யும், அல்டிமேட் ஸ்டார் அஜித்தையும் வைத்து தமிழில் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
சுமார் 16 வருடங்களுக்கு முன் அஜித்-விஜய்யும் ‘ராஜாவின் பார்வையிலே’ என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தார்கள். அதற்கு பிறகு, மீண்டும் இவர்கள் இணையும் வாய்ப்பு கிடைத்துள்ளது. படத்தை யார் இயக்கப் போகிறார்கள், அஜித்தும்-விஜய்யும் இணைவார்களா என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டும். அப்படி இருவரும் இணைந்தால் தல மற்றும் தளபதி ரசிகர்களுக்கு இன்னொரு தீபாவளியாக இந்த படம் அமையும் என்பதில் ஆச்சர்யமில்லை.
பலே யோசனை… ஒத்து வருவாங்களா….?

விஜய்க்கு ஜோடியாகும் காஜல்!!!!


விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் படத்திற்கு ஏஞ்சலா ஜான்சனை நாயகி ஆக்கலாம் என்று முடிவு செய்து இருந்தார்கள். விஜய் – ஏஞ்சலா ஜான்சனை வைத்து ஒரு போட்டோ ஷுட் நடத்தினார் சந்தோஷ் சிவன். இந்நிலையில் இப்படத்தில் இருந்து தேதிகள் பிரச்னை காரணமாக விலகி விட்டாராம் ஏஞ்சலா ஜான்சன்.
இதனால் வேறு ஒரு நாயகியை தேடி வந்தார்கள். இந்தியில் முன்னனி நாயகியாக இருக்கும் சோனம் கபூரை நாயகி ஆக்கலாம் என்று முடிவு செய்து அவரிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக செய்திகள் வலம் வந்தன.
இந்நிலையில் விஜய் படத்தின் நாயகியாக காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். டிசம்பர் 1ம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.
தற்போது தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளிலும் முன்னணி நாயகியாக வலம் வருகிறவர் காஜல். தமிழில் சூர்யாவிற்கு ஜோடியாக மாற்றான், தெலுங்கில் ஜுனியர் என்.டி.ஆருடன் ஒரு படம் மற்றும் ராம் சரண் தேஜா உடன் ஒரு படம் என நடித்து வருபவர் விஜய் படத்தின் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.
‘மாலை நேர மழைத்துளி’ என பெயரிடப்பட்டு இருக்கும் இப்படத்தினை இயக்க இருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க இருக்கிறார்.

Wednesday, November 16, 2011

சாட்டிலைட் தொலைகாட்சி தொடங்குகிறார்_-- விஜய் !!!


தனியார் சாட்டிலைட் தொலைகாட்சி ஒன்றை தொடங்குவது; இளையதளபதி விஜய் மற்றும் அவரது அப்பாவின் நீண்டநாள் திட்டம்! இதற்கான முதல்கட்ட பணிகள் ஒரு சிறு அலுவலகத்துடன் ஏற்கனவே தொடங்கிவிட்டன. சேனலின் பெயர் அதை ஒளிபரப்ப இருக்கும் சாட்டிலைட் என; எல்லா விஷயங்களையும் விஜயின் மனைவி சங்கீதா கவனித்துவருகிறார்.தொழில்நுட்பம் தொடர்பான பணிகளை கவனிக்க முன்னணி சேனலில் பணிபுரிந்த ஒருவரிடம் கன்சல்டேஷன் பெற்றிருக்கிறார்களாம்.
தற்போது சேனலுக்கு எவ்வளவு தளவாடங்கள் வாங்குவது எவ்வளவு மேன் பவர் என்பதை இறுதிசெய்யும் வேலையில் இருக்கிறாராம் சங்கீதா! இந்த தொடக்கக் கட்டப் பணிகள் முடிந்தவுடன் சேனலின் லோகோவுடன் வரும் பொங்கல் அன்று அறிவிக்கப்படும் என்கிறார்கள் விஜய் வட்டாரத்தில். இந்த சேனலின் நிர்வாக தலைமை பொறுப்பை பிரபல பத்திரிக்கையாளர் ஏற்கவிருக்கிறாராம்.
இதற்கிடையில் விஜய் வேறொரு சேனலுக்கு கோடீஸ்வரன் டைப் குயிஸ் நிகழ்ச்சியை நடத்தித் தர ஒப்புக்கொண்டிருப்பது பற்றி கேட்டால், அது பற்றி விஜய் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்கிறார்கள் விஜய்க்கு நெருக்கமானவர்கள்!

விஜய்க்கு ஜோடியாகும் பிரியா ஆனந்த் ......



இளைய தளபதி விஜய், முருகதாஸ் இணையும் படம் குறித்து நாளுக்கொரு செய்தி என சூழல் சூடாகி வருகிறது. இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு நீரவ்‌‌ஷா என சில பேரும், சந்தோஷ் சிவன் என சில பேரும் தெரிவிக்கின்றனர். மேலும், விஜய்க்கு ஜோடி குறித்து பல தகவல்கள் வெளியாகின, ஆனால் இளைய தளபதி விஜய்க்கு ஜோடி தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. வாமனன், 180 படத்தில் ஹீரோயனாக நடித்த ப்ரியா ஆனந்த் தான் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். இதுமட்டுமின்றி பாலிவுட் புயல் பிரியங்கா சோப்ரா¬வுயம் நடிக்க வைக்க ஏ.ஆர் முருகதாஸ் திட்மிட்டுள்ளதாக தெரிகிறது. இசை ஹா‌ரிஸ் ஜெயரா‌ஜ். விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தயாரிக்கும் இந்த படத்துக்கு மாலை நேரத்து மழைத்துளி என்று பெயர் வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறுகிறார்கள்.

Tuesday, November 15, 2011

நண்பனை வாங்கிய உதயநிதி..!!!!!


7ஆம் அறிவு படத்தின் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் விஜய் நடித்துள்ள நண்பன் படத்தின் ஒரு ஏரியா விநியோக உரிமையை வாங்கியிருப்பதாக தனது ட்வீட்டரில் தெரிவித்துள்ளார். 7ஆம் அறிவுக்கும் வேலாயுதத்திற்கும் இடையே கடும் போட்டிகள் நடைபெற்றன நடை பெறுகிகின்றன, இருந்தும் விஜய் மீதும் ஷங்கர் மீதும் உள்ள நம்பிக்கையால் வியாபார ரீதியாக ஏரியாவை வாங்கியிருக்கிறார், உதயநிதி ஸ்டாலின்.
விஜய்யும் உதயநிதியும் நெருங்கிய நண்பர்கள் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Ajith’s Europe tour...



Ajith and the rest of the Billa 2 team have completed a schedule of shoots in Goa and have returned to the city. They are now gearing up to begin the next schedule which will start off in Georgia, Europe.
Director Chakri Toleti is making all the arrangements for this schedule. Sources say that Ajith and Chakri Toleti want to make Billa 2 on par with Hollywood films and have decided on some great locations in Georgia to film a few scenes.
The team will leave for Georgia very soon, states sources in Kollywood.

VIJAY GLAD TO WORK WITH SANTHOSH SIVANNNNNNNNNN

தல thalapathi
During the audio launch of Urumi, Vijay said that he is happy to be working in Santosh Sivan in his next film. The actor launched the audio CD of Urumi, which is the dubbed version of the Malayalam film with the same title. Apparently, Santosh is to wield the camera for Vijay’s next to be directed by AR Murugadoss. The director said that he has seen Santosh Sivan’s deftness in handling the camera in films like Roja and Dil Se and is happy to work with him.

Vijay said that the songs in Urumi looked like paintings and that is the power of Santosh’s camera handling skills.

The film’s lead star and one of the producers Prithviraj could not attend the audio launch as he is busy on the sets of Masters, a film directed by Subramaniapuram fame Sasi Kumar.

Mani Ratnam said that soon after seeing the Malayalam version of Urumi he felt that only Santosh Sivan can make such a film within limited budget and time span.

Speaking at this event, Santosh Sivan said that he always wanted to make such films and he is happy to have done that within a restricted time frame and budget. Urumi is a historical fantasy flick that has Prithviraj, Prabhu Deva, Genelia, Nithya Menon and others. The audio launch took place at Satyam Cinemas this morning.

விதவிதமா விஜய் !!!!!

ஆரம்பகாலத்தில் காதலை மையமாகக் கொண்ட கதைக்களங்களில் நடித்து வந்தார் விஜய். 'பூவே உனக்காக' , ' காதலுக்கு மரியாதை' போன்ற படங்களில் நடித்து வந்தவரை கமர்ஷியல் பாதையில் முழுமையாக திரும்பிய படம் 'திருமலை'. அப்படத்திற்கு கிடைத்த வரவேற்பால் தொடர்ந்து கமர்ஷியல் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

'திருமலை' படத்தினை தொடர்ந்து 'கில்லி', 'மதுர', 'திருப்பாச்சி', 'சிவகாசி', 'ஆதி', 'போக்கிரி', 'குருவி', 'வில்லு', 'வேட்டைக்காரன்', 'சுறா', 'வேலாயுதம்' என நடித்த பல படங்கள் கமர்ஷியல் படங்கள். இடையில் 'சச்சின்', 'காவலன்' என சில படங்கள் மட்டுமே வேறு கதை களங்களில் நடித்தார்.

விஜய் நடிப்பில் அடுத்ததாக வெளிவர இருக்கும் படங்கள் அனைத்துமே விஜய்யின் நடிப்பை வெளிப்படுத்தும் வகையில் அமைய இருப்பதாக, விஜய் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

ஷங்கர் இயக்கும் 'நண்பன்' படத்தில் விஜய்க்கு சண்டை காட்சிகள் எதுவுமே இல்லாமல் முழுக்க காமெடியில் பட்டைய கிளப்பி இருக்கிறாராம். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கும் படத்தில் கூட இதுவரை பார்க்காத விஜய்யை பார்க்கலாம் என்கிறது படக்குழு.

ஏ.ஆர்.முருகதாஸ் படத்தினை முடித்துவிட்டு கெளதம் மேனன் இயக்கும் 'யோஹன்' படத்தில் நடிக்க இருக்கிறார். அப்படத்தில் இன்டர்நேஷனல் ஏஜென்ட்டாக நடிக்க இருக்கிறார்.

விஜய்யை வெவ்வேறு பரிமாணங்களில் அடுத்த அடுத்த படங்களில் பார்க்க இருப்பதால், வலைதளங்களில் அவரது  ரசிகர்கள் மத்தியில் அதுகுறித்து கருத்து பரிமாற்றம் நடைபெற்று வருகிறது.

Monday, November 14, 2011

அஜித்துக்கு வில்லனாக நடிக்கும் பாலிவுட் நடிகர் ....



பில்லா-2வில் அஜித்துக்கு வில்லனாக பாலிவுட் நடிகர் வித்யூத் ஜம்பால் நடிக்கிறார்.
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் கடந்த 2007ம் ஆண்டு அஜித், பிரபு, நயன்தாரா, நமீதா ஆகியோர் நடிப்பில் மிகப்பெரிய வெற்றிப் படம் பில்லா. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் அஜித் நடிப்பில், பில்லா-2 உருவாகி வருகிறது.


அஜித் ஜோடியாக பார்வதி ஓமணக்குட்டன் நடிக்கிறார். விஷ்ணுவர்தனுக்கு பதிலாக சக்ரி டோல்டி இப்படத்தை இயக்குகிறார். ஐ.என்.எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக வளர்ந்து வரும் நிலையில் அஜித்துக்கு வில்லனாக பாலிவுட்டில் அறிமுகமாகியிருக்கும் வில்லன் நடிகர் வித்யூத் ஜம்வால் நடிக்க இருப்பதாக ஐ.என்.எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.


வித்யூத் ஜம்வால் சமீபத்தில் இந்தியில் வெளியான போர்ஸ் படத்தில் ஜான் ஆபிரஹாமுக்கு வில்லனாக நடித்தவர். தன்னுடைய 3 வயதிலேயே களரி தற்காப்பு கலையை கற்றுத் தேர்ந்துள்ளார் வித்யூத்.
களரி மட்டுமன்றி ஜிம்னாஸ்டிக், குங்பூ, ஆகிய தற்காப்பு கலைகளையும் பயின்றுள்ளார். மேலும் சில ஆண்டுகள் மொடலிங் துறையிலும் அசத்தியிருக்கிறார்.
அதுமட்டுமின்றி வித்யூத் தேசிய ஜிம்னாஸ்ட் சாம்பியனும் ஆவார். இந்தியில் போர்ஸ் படத்தில் வித்யூத்தின், அசத்தலான நடிப்பு அவரை தமிழுக்கு வர வழைத்திருக்கிறது.


இந்தி மட்டுமின்றி தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர்., உடன் சக்தி மற்றும் ஊசரவள்ளி போன்ற படத்திலும் பணியாற்றி இருக்கிறார்.
தமிழ் படத்தில் நடிப்பது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும், அதுவும் அஜித்துடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது இரட்டிப்பு மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறியுள்ளார் வித்யூத்.


பில்லா-2 படத்தின் படப்படிப்பு விறுவிறுப்பாக வளர்ந்து வருகிறது. முதற்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் 30நாளும், 2ம் கட்ட படப்பிடிப்பு கோவாவில் 39நாளும் முடிந்து தற்போது 3ம் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் திரைக்கு வர இருக்கிறது என்றுசெய்திகள் வெளியாகியுள்ளன.

திருச்செந்தூரில் தொடங்கும் விஜய் முருகதாஸ் படம்!


வேலாயுதம், நண்பன் ஆகிய படங்களைத் தொடர்ந்து  தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் 
இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் படத்துக்கு தலைப்பு தேர்வு செய்வதில் தற்போது பிஸியாக இருகிறார் முருகதாஸ்.  இந்தப்படத்தை விஜய் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரன் தனியொரு ஆளாக தயாரிக்க இருக்கிறார்.

இப்படத்தில் விஜய்க்கு ஹீரோயின் யார், வில்லன் யார் என்பதெல்லாம் இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில், படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை திருச்செந்தூர் முருகன் சன்னதியில் இருந்து தொடங்க இருப்பதாக அதிகாரபூர்வமான முருகதாஸ் அலுவலக வட்டாரங்கள் தெரிவிகின்றன.

திருச்செந்தூரில் ஆரம்பிக்கும் கதை மும்பையில்  முடிவதுபோல திரைக்கதை அமைத்து இருக்கின்றாராம் முருகதாஸ். அதேநேரம் படத்தின்  பெரும்பகுதி மும்பையில் நடைபெற இருக்கிறது என்கிறார்கள்.

இந்தப் படத்தில் நாயகன் கமல் போல நல்ல தாதாவாக விஜய் நடிக்க இருகிறார் என்ற சூடான தகவலைத் தருகிறார்கள் இயக்குனர் வட்டாரத்தில் இருந்து. கதைப்படி இரண்டு ஹீரோயின்கள் தேவை.

படத்தை ஹிந்தியிலும் டப் செய்து வெளியிட இருபதால்  ப்ரியங்கா சோப்ரா மற்றும் 180 படத்தில் நடித்த ப்ரியா ஆனந்த் ஆகிய இரண்டு பேர் இப்போதைக்கு பரிசீலனையில் இருபதாகச் சொல்கிறார்கள். இம்மாத இறுதியில் முழுவிவரமும் அதிகார பூர்வமாக அறிவிக்க இருகிறாராம் எஸ்.ஏ.சி!

தமிழில் ‘நண்பன்’ தெலுங்கில் ’3 ராஸ்கல்ஸ்’!!!!!!


இயக்குநர் ஷங்கரின் ‘நண்பன்’ படம் தமிழ் மற்றும் தெலுங்கில் பொங்கலன்று வெளியாகிறது. தமிழில் ‘நண்பனாகவும்’ தெலுங்கில் ’3 ராஸ்கல்ஸ்’ ஆகவும் வெளியாகிறது.
‘வேலாயுதம்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து இளைய தளபதி விஜய்க்கு அடுத்த பெரிய படம் ‘நண்பன்’. ‘வேலாயுதம்’ அரங்குகள் நிறைந்து வெற்றி நடைபோடுகிறது.
விஜய் ரசிகர்களுக்கு அடுத்த விருந்து பொங்கலன்று வெளியாகும் ‘நண்பன்’. திருநாளில் ரிலீசுக்காக காத்திருக்கிறது ‘நண்பன்’, அதே நாளன்று தெலுங்கிலும் வெளியாகிறது.
தெலுங்கிலும் பெரிய எதிர்பார்ப்பை பெற்றிருக்கிறது ’3 ராஸ்கல்ஸ்’. படத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் மற்றும் இலியானா முன்னணி நடிகர்களாக நடித்துள்ளனர்.
தெலுங்கில் இலியானா நன்கு அறிமுகமானவர், நிறைய வெற்றிபடங்களை கொடுத்திருக்கிறார். விஜய் மற்றும் ஜீவாவிற்கும் நல்ல மார்கெட் இருக்கிறது. ஸ்ரீகாந்த் பெரிதும் பேசப்படவில்லை என்றாலும் இந்த படத்திற்குப் பின் அதை எதிர்பார்க்கலாம்.
‘நண்பன்’ திரைப்படம் ஏற்கனவே அமீர்கான் – கரீனா கபூர் நடித்த ’3 இடியட்ஸ்’ படத்தின் ரீமேக். படத்திற்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ். சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா முன்னணி நடிகர்களாக நடித்துள்ளனர்.

விஜய் வெளியிடும் உருமி இசை


மலையாளத்தில் வெளியாகி பாராட்டுக்களைப் பெற்றுள்ள உருமி படத்தின் தமிழ் வடிவ இசையை நாளை வெளியிடுகிறார் நடிகர் விஜய்.
பிருத்விராஜ் பிரபு தேவா, ஆர்யா, ஜெனிலியா, வித்யா பாலன் நடிக்கும் படம் உருமி. மலையாளத்தில் வெளியாகியுள்ள இந்தப் படத்தின் தமிழ் வடிவம் விரைவில் வெளியாக உள்ளது.
இந்தப் படம் குறித்து ஜெனிலியா கூறுகையில், “நான் நடித்த படங்களில் மிக வித்தியாசமானது, புதிய அனுபவத்தைத் தந்தது உருமி. சரித்திரக் கதையில் நடிப்பது சாதாரணமானதல்ல என்பதை இந்தப் படத்தில் புரிந்து கொண்டேன். அற்புதமாக வந்துள்ளது,” என்றார்.
சந்தோஷ் சிவன் இயக்கியுள்ள இந்தப் படம், மலையாளத்தில் விமர்சகர்கள் பாராட்டைப் பெற்றுள்ளது. பல்வேறு படவிழாக்களிலும் பங்கேற்று வருகிறது. தீபக் தேவ் இசையமைக்க, வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார்.
உருமி தமிழ் படத்தின் பாடல்கள் நாளை சத்யம் திரையரங்கில் வெளியிடப்படுகிறது. நடிகர் விஜய் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பாடல்களை வெளியிடுகிறார்.
பதினைந்தாம் நூற்றாண்டில் நடக்கும் கதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது உருமி.

விரைவில் இலங்கைக்கு சென்று ரசிகர்களை சந்திப்பேன் – நடிகர் விஜய்


நடிகர் விஜய் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது,  ‘‘சீமான் இயக்கத்தில் எப்போது நடிக்கப்போகிறீர்கள்?’ என்கிறார்கள். என்னுடைய ரசிகர்களில் ஒரு சாரார் அவர் படத்தில் நடிக்க சொல்கிறார்கள்.
இன்னொரு சாரார் நடிக்க வேண்டாம் என்கிறார்கள். நான் என்ன செய்ய முடியும்? ’’ என்று தெரிவித்துள்ளார்.
அவர் மேலும்,  ‘’இலங்கையில் உள்ள ரசிகர்கள் எப்போது இலங்கை வரப்போகிறீர்கள் என்கிறார்கள்.
‘கில்லி’ பட வெற்றியின்போது 2004ம் ஆண்டு இலங்கை தியேட்டருக்கு சென்று ரசிகர்களை சந்தித்தேன். விரைவில் இலங்கைக்கு செல்வேன். ரசிகர்களை சந்திப்பேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது,  ‘‘சீமான் இயக்கத்தில் எப்போது நடிக்கப்போகிறீர்கள்?’ என்கிறார்கள். என்னுடைய ரசிகர்களில் ஒரு சாரார் அவர் படத்தில் நடிக்க சொல்கிறார்கள்.
இன்னொரு சாரார் நடிக்க வேண்டாம் என்கிறார்கள். நான் என்ன செய்ய முடியும்? ’’ என்று தெரிவித்துள்ளார்.
அவர் மேலும்,  ‘’இலங்கையில் உள்ள ரசிகர்கள் எப்போது இலங்கை வரப்போகிறீர்கள் என்கிறார்கள்.
‘கில்லி’ பட வெற்றியின்போது 2004ம் ஆண்டு இலங்கை தியேட்டருக்கு சென்று ரசிகர்களை சந்தித்தேன். விரைவில் இலங்கைக்கு செல்வேன். ரசிகர்களை சந்திப்பேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

Sunday, November 13, 2011

நான்கு வித்தியாசமான கதாபாத்திரங்களில் விஜய்-இலியானா ஜோடி!!!!!!!!!!!


நண்பன் படத்திற்காக ரஜினி, கமலை மையமாக வைத்த காட்சிகள் இடம்பெறுவதாக படக்குழு செய்திகள் தெரிவித்துள்ளன.
இயக்குனர் ஷங்கர் இயக்கும் நண்பன் படத்தில் இளையதளபதி விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
இப்படத்தில் இளைய தளபதி விஜய் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
நண்பன் படத்தில் வரும் ஒரு பாடல் காட்சியில் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நாயகர்களான ரஜினி காந்த்,கமல் ஹாசன் இருவருக்கும் புகழ் மரியாதை சூட்டுகிற காட்சி இருப்பதாக பட உலகில் பரபரப்பான பேச்சு இருந்தது.
நாயகி இலியானாவுடன் நாயகன் விஜய் எந்திரன் ரஜினி, இந்தியன் கமல் இருவரையும் நினைவு படுத்துகிற மாதிரியான காட்சியை நண்பனில் இயக்குனர் ஷங்கர் வைத்திருப்பதாக பட உலகில் பேசப்பட்டது. இதையெல்லாம் கேள்விப்பட்ட இயக்குனர் ஷங்கர் சிரித்தாராம்.
நண்பன் படத்தின் பாடல் காட்சியில் விஜய்-இலியானா ஜோடி நான்கு வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
ஏற்கனவே இயக்குனர் ஷங்கர் இயக்கிய படங்களில் உள்ள கதாபாத்திரங்களில் நண்பன் பட ஜோடி தோன்றவில்லை. விஜய்-இலியானா இருவரும் பாடலுக்கு பொருத்தமான வகையில் நடித்துள்ளார்கள் என்கிறது பட வட்டாரம்.

Friday, November 11, 2011

அஜித் வேண்டுகோளை ஏற்று தலைப்பை மாற்றினார் தமிழ்படம் இயக்குனர்!!!!!!!!!!


அறிமுக இயக்குனர் ஒருவரின் முதல் படம் வெற்றி பெற்றால் அந்த இயக்குநரின் அடுத்தப் படத்தை தயாரிக்க, நீ, நான் என்று தயாரிப்பாளர்கள் போட்டி போட்டுகொண்டு அட்வான்ஸ் கொடுப்பார்கள். ஆனால் தமிழ்படங்களை துணிச்சலாக நக்கலடித்த அமுதனின் விஷயத்தில் அது எடுபடவில்லை.
மாபெரும் வெற்றிப் படத்தை கொடுத்தப் பிறகும் பெரிய இடைவெளிக்குப் பிறகு தனது அடுத்தப் படத்தை ‘தலவலி’ என்ற தலைப்புடன் தொடங்க தயாராகிவிட்டதாக மீடியா நண்பர்களிடம் அறித்தார்.
இந்தச் செய்தி தீபோல பரவி, அஜித் காதில் இந்தப் படத்தின் தலைப்பு போய் விழ, உடனே அமுதனின் போன் நம்பரை வாங்கி “ என்னை எவ்வளவு வேணுமானாலும் கிண்டல் பண்ணுங்க! ஒரு கிரியேட்டரா அது உங்க உரிமை! அதுக்காக தலவலி என்று தலைப்பு வைக்கணுமா? இந்தப் பட்டம் எனது ரசிகர்கள் எனக்கு பிச்ச போட்டது.
அதை கிண்டல் அடிச்சா அவங்க மனுசு நோகும் தல! கொஞ்சம் பெரிய மனசு பண்ணுங்க” என்றாராம் பணிவாக.
நெகிழ்ந்துபோன அமுதன் தலயின் பணிவில் ஆடிப்போய் இப்போது படத்தின் தலைப்பை ’இரண்டாவது படம்’ என்று மாற்றியிருகிறார்.
இந்தப் படத்தில் அஜித்தின் மைத்துனர் ரிச்சர்டையும் ஒரு ஹீரோவாக்கி தல அஜித்துக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருகிறார். ரிச்சர்ட், தவிர விமல், அரவிந்த் ஆகாஷ் ஆகியோரும் மற்ற இரண்டு ஹீரோக்கள்.
ஸ்க்ரீன் க்ராப்ட்ஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் தரணி, தயாரிக்கும் இப்படத்திற்கு கண்ணன் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு விஜய் உலகநாதன். விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

ILAYATHALAPATHY FANATICS OPEN LETTER TO ALL VIJAY FANS......

Being a Mass Hero is the most difficult job in the world! Even more than character artists because it’s an art which requires an actor to entertain with nothing in the film! In that way I liked Vijay very much because early in 2000s Vijay was (and still is) the next big thing in Kollywood!

Vijay might not have the handsome looks or screen presence as Ajith but what he lacks in that he makes up for with his emotions, comical timing and dance skills. 

Being a fan is one thing and being a "fanatic" is a diff thing! What Vijay has is a troop of fanatics who will defend him to death a feat which none of other actors ever have!

And Vijay as a person also wants to have such fanatics because the one thing we all know is how desperate Vijay wants to be heralded as the next "heir apparent" to MGR's brand of cinema to politics transition! He has made no secret in his films and he hopes by having such a huge number of fanatics makes that transition easy!

There in lies the difference between a Vijay and Ajith who fears to have fanatics and dissolved all his fan clubs! Because being a fan you can always give constructive criticism but once you become fanatics you will stop seeing the negatives!

I have seen all the posts of Vijay fanatics and not one post have I seen a constructive criticism! Every post I read is like"THALAPATHY's treat, No one can beat our PATHY, This is what we expect from THALAPATHY, He has given us a movie like Pokkiri and we are satisfied with it" 
And then I see posts by Vijay fans asking other actor fans to respectably f**k off from saying anything about your THALAPATHY or abusing all reviewers (eminent or amateurs) who review negatively or say this film has nothing new and just a rehash of all his old films!
You know what people see in such posts? A desperation from you fanatics to make people like what you like or in other words you hate people pointing out the obvious that the formula Vijay uses is stale a point which you people so badly want to ignore! 
I see you fanatics and I really think if you people start to constructively criticize your THALAPATHY you can bring a great change in Tamil Cinema because your strength is so much! 

This being said I am not saying I am a World Cinema Aficionado who happened to see Tamil Movies! I am also a Masala film fan who is super excited seeing OSTHE trailer but too much of anything is good for nothing!

If you Vijay fans want neutrals or other hero fans to accept your THALAPATHY's film you have to come up with something different. If you decide what your hero currently gives you is good enough then you should never comment or abuse what neutrals comment about the film!
That being said it’s good to see Vijay finally trying to become brave after the change of govt. in doing Shankar and GVM films! I hope this newfound braveness in him continues.

And an advice for all you Vijay fans do not show your frustration by abusing people who comment against him, if your THALAPATHY does movies good enough, original enough, all these Anti-Vijays and Neutrals are bound to come to your side! 

I said this after seeing 7Am Arivu and I am saying this now also VELAYUDHAM will be a great hit, a profitable venture enough to make the actor think ,'Right my fanatics will never desert me no matter what I give them' & the producer think 'Right anyone can gain profit by making Vijay act in any kind of film' 

What I see is an actor with such huge potential being wasted in such films. If Vijay had the guts to explore ventures with the talent he has and the fan following he has he can take Tamil Cinema to new heights. 

I am not going to review this film much than saying the plus and minus of the film because reviewing it will be retyping what I said for his previous 10 films.

POSITIVES:
Santhanam and co (really if this film did not have Santhanam and other comedians this would have been comparable to 7Am Arivu)
Maayam Seithaayo (For first time Vijay tried to do different in a song rather than his usual dancing amongst artificial sets of sugarcanes and haystacks or walking in a chilly mountain around heroine)
Really Good story

NEGATIVES:
Same old same old
Cliches cliches cliches
Bad screenplay which wasted a potentially good story
Bad wardrobe selection (Entire movie I saw a plain silk shirt tailored with eye sore tapestry lining)
Lack of originality (*cough* Assassins Creed *cough*)
This movie had too many heroines to handle
Villains (too villainy and too gory for family viewing)
Too long

VERDICT: Another staple movie from Vijay which entertains but nothing more. Will be a hit because of the quality of movies which surround it and also by Vijay fanatics who will watch the movie any number of times just to see their THALAPATHY.

அஜித் மற்றும் அனுஷ்கா நடிக்கும் புதிய படம் – சுவாரஸ்யத் தகவல்கள்


விஜயா புரொடெக்சனுக் காக அஜீத் நடிக்கப்போகும் படத்தை இயக்கப்போவது ‘சிறுத்தை’ டைரக்டர் சிவா.
சிறுத்தையை போலவே அஜீத்தை வைத்து இவர் எடுக்கப்போகும் படமும் ஒரு தெலுங்கு படத்தின் ரீமேக் என்று சொல்லபடுகிறது.
ஆனால் அது எந்த படம் என்ற விசயத்தை மட்டும் படு சீக்ரெட்டாக வைத்திருக்கிறார்கள்.
எனென்றால் எந்த படம் என்று சொல்லிவிட்டால், அந்த படத்தை ரீமேக் செய்வதற்குள், அப்படத்திலிருக்கும் முக்கியமான சீன்களை சுட்டுவிடுகிறார்கள் என்பதால் எந்த படம் என்ற விஷயத்தில் ரகசியம் காக்கப்படுகிறதாம்.
இப்படத்தை பற்றி தெரிந்த ஒரே விஷயம் இப்படத்தில் அஜீத்துக்கு ஜோடி அனுஷ்கா.

கமலுக்காக நடனமாடிய விஜய்


கடந்த 7ஆம் திகதி உலகநாயகன் கமலஹாசன் தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக கொண்டாடினார்.
முக்கிய தலைவர்கள், நட்சத்திரங்கள் என எல்லோரிடமிருந்தும் பிறந்தநாள் பாராட்டுக்கள் கமலுக்கு குவிந்தன.
இந்நிலையில் தன்னை வாழ்த்திய அனைவருக்கும் கமல் ஒரு ரகசிய பார்ட்டி அளித்திருக்கிறார். இந்த பார்ட்டியில் நடிகர் விஜய் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
பார்ட்டியின் இடையே திடீரென கமல் விஜய்யை அழைத்து தனக்காக நடனமாட வேண்டும் என கேட்டிருக்கிறார்.
அதிர்ச்சியில் உரைந்து போன விஜய் சற்று சுதாரித்துக் கொண்டு பின்னர் அடக்கமாக சில ஸ்டெப்களை போட்டிருக்கிறார்.
கமலும் அவருடன் இணைந்து ஆடி இருக்கிறார். கமலின் பிறந்தநாளன்று விஜய் நடனமாடியது அவரது வாழ்வில் மறக்க முடியாத தருணமாக இருக்கும் என கூறப்படுகிறது.