For Thala Thalapathy Fans



Saturday, January 14, 2012

என்னுடைய திரைப்படத்தில் வித்தியாசமான அஜீத்தை ரசிகர்கள் பார்ப்பார்கள்: விஷ்ணுவர்தன்.....


தமிழ் திரையுலகில் தல அஜீத்குமாருக்காக திரைக்கதையை வேகமாக தயாரித்து வருவதாக இயக்குனர் விஷ்ணுவர்தன் தெரிவித்துள்ளார்.
தல அஜீத் குமார் நடித்த பில்லா-2 திரைப்படத்தை ஷக்ரி டோலெட்டி இயக்க பார்வதி ஓமன குட்டன் நாயகியாக நடித்துள்ளார்.
பில்லா-2 திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 


இத்திரைப்படத்திற்கான தனது பணிகள் முடிந்ததும் அஜீத் குமார் குடும்பத்துடன் சிங்கப்பூர் சென்று வந்துள்ளார்.


இதையடுத்து அஜீத் குமார் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இதுகுறித்து விஷ்ணுவர்தன், அஜீத் குமாரிடம் சொன்ன ஒரு வரி கதைக்கு திரைக்கதை அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
திரைக்கதை அமைக்கும் பணிகள் எல்லாம் முடிந்தால் தான் அந்தந்த பாத்திரத்திற்கு யார் பொருந்துவார்கள் என்று தீர்மானிக்கப்படும். அதன் பிறகே அடுத்த கட்ட பணிகள் தொடங்கும்.


அதற்குள் பல்வேறு விதமாக தகவல்கள் வெளி வருகின்றன. ஆனால் எதுவும் உண்மையில்லை. திரைக்கதை அமைக்கும் பணி இறுதிகட்டத்தில் இருக்கிறது. அது முடிந்தால் தான் மற்றவைகளில் கவனம் செலுத்துவோம் என்று தெரிவித்துள்ளார்.
அஜீத் ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு, நீங்கள் எனது படத்தில் வித்தியாசமான தலயை பார்க்க இருக்கிறீர்கள் என்பது மட்டும் உறுதி என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment