For Thala Thalapathy Fans



Sunday, September 25, 2011

மூன்று இயக்குனர்கள் ...!ஒரு அஜித் ...!யாருக்கு வெற்றி ........


மங்காத்தா படத்தின் மாபெரும் வெற்றி, அஜித்தை கோடம்பாகத்தின் மோஸ்ட் வாண்டேட் மாஸ் ஹீரோக்களின் பட்டியலில் சேர்த்திருகிறது. மீண்டும் வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜித் நடிக்க இருகிறார் ஆனால் உடனடியாக அல்ல என்பதை வெங்கட் பிரபுவே கூறிவிட்டார். அப்படியானல் அஜித்தை அடுத்து இயக்கப் போவது யார் என்ற கேள்வியை வைத்துக்கொண்டு ஊடகங்கள் ஆளாளுக்கு ஒரு பரபரப்புச் செய்தியை கொடுத்து வருகின்றன.
ஆனால் உண்மையில் அஜித், தனது 51-வது படத்துக்கு இயக்குனர் யார் என்பதில் இன்னும் எந்த இறுதி முடிவையும் எடுக்கவில்லை என்கிறார்கள் அவரது மேனேஜர் வட்டாரத்தில். ஆனால் பில்லா இரண்டாம் பாகத்துக்கு அடுத்து ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் நடிக்க கால்ஷீட் கொடுத்திருகிறார் அஜித். இது உறுதியாகி விட்டது என்கிறார்கள். மங்காத்தா படம் ரிலீஸ் ஆகும் முன்பே மணிரத்னமும் அஜித்தும் சந்தித்தது பெரும் பரபரப்பைக் கிளப்பியது. ஆனால் அந்த சந்திப்பில் முன்னேற்றம் எதுவும் இல்லை.
இன்னும் சில வெற்றிகளுக்கு பிறகு நாம் இணையலாம் என அஜித் திட்டவட்டமாக தெரிவித்து விட்டதாக தகவல் கிடைக்கிறது மெட்ராஸ் டாக்கீஸ் வட்டாரத்தில் இருந்து. அடுத்து ஜெயம்ராஜா இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்று கொழுத்திப் போட்டார்கள். ஆனால் ஜெயம்ராஜாவே இதை நேரடியாக மறுத்து விட்டார் ” ‘வேலாயுதம்’ மற்றும் ‘மங்காத்தா’ ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்பு, சென்னை பின்னி மில்லில் நடந்து கொண்டிருக்கும் போது நானும் அஜீத்தும் சந்தித்தோம்.
அப்போது சாதாரணமாக பேசிக் கொண்டோமே தவிர, இருவரும் இணைந்து படம் பண்ணுவது குறித்து எதுவும் பேசவில்லை.” என்கிறார் நெத்தியடியாக..! அப்படியானல் அஜித்தின் அடுத்த இயக்குனர் யார் என்றால் இயக்குனர் ஷங்கரை கைகாட்டுகிறார்கள் ஏ.எம். ரத்னம் அலுவலக வட்டாரத்தில்! உண்மையில் தற்போது தெலுங்கில் ‘ஷேடோ’ என்ற படத்தை இயக்கி வரும் விஷ்ணுவர்தனுக்கு அடுத்த வாய்ப்பை வழங்குவது என்று எண்ணியிருந்தாராம் அஜித்.
காரணம் அஜித்துக்காக விஷ்ணுவர்த்தன் கையில் எடுத்திருக்கும் கதை அப்படிப்பட்டது என்கிறார்கள். அண்டோனியோ பான்ராஸ் நடித்து உலகப் புகழ்பெற்ற ‘டெஸ்பரெடோ’ படத்தையே தமிழுக்கு திரைக்கதை அமைத்து இருகிறாராம். ஆனால் தயாரிப்பாளர் ஏ.எம். ரத்தினத்துக்கு பாய்ஸ் படத்தை இயக்கிக் கொடுத்து, அது படுதோல்வி அடைந்த காரணத்தால் அப்போது ஏற்பட்ட சரிவில் இருந்து எழமுடியாத நிலையில் இருந்து வரும் தயாரிப்பாளர் ரத்துனத்துக்கு ஒரு படத்தை இயக்கித்தர ஒப்புக்கொண்டாராம் ஷங்கர்.
அதற்கு இதுவே சரியான தரும் என்பதை உணர்ந்த ரத்னம் “ நீங்கள் ஏன் அஜித்தை இயக்கக் கூடாது ?” என்று கேட்டாரம். ஷங்கரோ அஜித்துகான கதை இப்போதைக்கு என்னிடம் இல்லை. என்றாலும் யோசித்து முடிவெப்போம் என்று சொல்லியிருக்கிறார் என்கிறார்கள். ஆக அஜித் ஷங்கர் அல்லது விஷ்ணுவர்த்தன் ஆகிய இரண்டு பேரில் ஒருவரது இயக்கத்தில் நடிப்பது உறுதி என்பது தெளிவாகத் தெரிகிறது

No comments:

Post a Comment